திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். கோயிலை ஒட்டிய 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதையில் பௌர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் மேற்கொண்டனர்.