அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 வது நாளாக சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கூடுதல் பொறுப்புகளை கவனிக்கும் ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.