Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையை அனுமதியின்றி சீரமைத்ததாக கல்குவாரி மேலாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக ஆந்திரா எல்லையான சைனகுண்டா வனப்பகுதியில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை ஆந்திராவை சேர்ந்த கல்குவாரி மேலாளர் உமாசங்கர் அனுமதியின்றி சரிசெய்ததாக கூறப்படுகிறது.