ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், அறுபடை வீடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, திருப்பரங்குன்றம் சென்ற அவரிடம், மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பினர் மனு அளித்தனர்.