வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே போலி பதிவெண் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்து திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்திய சோதனையில் ஆந்திர மாநில இரு சக்கர வாகன பதிவெண் மூலம் இயங்கிய பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு, குடியாத்தம் மோட்டார் வாகன அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.