வரும் 13 ஆம் தேதி பஹ்ரைனில் நடைபெறும் விமானப்படை கண்காட்சியில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் சூலூர் விமானபடை தளத்திலிருந்து 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் சாகச வீரர்களுடன் சி-17 விமானம் புறப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச விமான கண்காட்சி நவம்பர் 13 ஆம் தேதி பஹ்ரைன் நாட்டில் நடைபெற உள்ள நிலையில், அதில் இந்திய விமானப்படை விமானங்களும் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்தியா சார்பாக பஹ்ரைன் செல்லும், தேசிய பறவை மயில் உருவம் பொறித்த ஹெகலிகாப்டர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இந்திய விமானபடை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.