போதைப் பொருள் கடத்தல் கும்பலின் ஆப்பிரிக்க டீலர்கள் இருவரை சென்னை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். கடந்த மாதம் மெத் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முகமது சுகேல் உள்ளிட்ட 12 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய டீலரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அபூ மற்றும் ராகுல் ஆகியோர் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரியவந்தது. அதன் அடிப்படையில் டெல்லி சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு, 15 கிராம் கொக்கைன், 5கிராம் மெத் மற்றும் 7 கிராம் ஹெராயின் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.