மதுரை சோழவந்தான் அருகே இயங்கி வந்த அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்னறிவிப்பு இன்றி கொள்முதலை நிறுத்தியதால் சுமார் 2 டன் நெல் குவியல் தேங்கியுள்ளது. முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் முன்னறிவிப்பு இன்றி நெல் கொள்முதலை நிறுத்தியது. இதனால் அறுவடை செய்த நெல் சேதமடைந்து வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.