திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள கடல் சுமார் 100 அடி அளவிற்கு உள்வாங்கியது. கடல்நீர் உள்வாங்கி பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்தன. படிக்கெட்டுகள் போல் பாசிப்படர்ந்த பாறைகள் தெரிந்ததால் பக்தர்கள் அதன் மீது நின்று செல்ஃபி எடுத்தும், ஆச்சரியத்துடன் பார்த்தும் சென்றனர்.