தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையே சிக்கிய இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தாமரங்கோட்டையில் பயணியை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து நின்ற போது, அரசு பேருந்து இடது புறமாக முந்த முயன்றதில் இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.