திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான மூன்றே மாதத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டூர் தோப்பு பகுதியை சேர்ந்த உதய பிரகாஷ் என்பவரும், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஹேமா என்பவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.