சென்னை சைதாப்பேட்டையில் கேஸ் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடந்து சென்றவர் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டை அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுபாஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை சாவியுடன் சாலையோரம் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு உள்ளே சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற நபர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி சென்றார். இது குறித்து சைதாப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.