சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. மானாமதுரையின் பல்வேறு பகுதிகளிலும் இரவு கனமழை பெய்தது. அப்போது மானாமதுரை- சிவகங்கை செல்லும் சாலையில் பெரிய மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்ததால், இரு மார்க்கத்திலும் வாகனங்கள் நகருக்குள் வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயின. இதனையடுத்து, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.