விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு வெடித்து சிதறியதில், பழைய இரும்பு கடை தீப்பற்றி எரிந்தது. அச்சம்பட்டி பகுதியில் வேடன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில், பழைய பொருட்கள் பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.