சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட இயேசு, 3ம் நாள் உயிர்த்தெழுந்த தினமான இன்று ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி உலக புகழ்பெற்ற நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் லட்சகணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, வாணவேடிக்கை மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் ஏசு பெருமான் மீண்டும் உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. இதனை கண்ட கிறிஸ்தவ மக்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.