திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள களத்துப்பட்டியில் திருமக்கோனார் - 55 இவரது வயலில் காலை நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.அதைத் தொடர்ந்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வயலுக்குள் இருந்த மலைப்பாம்பினை சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு பாம்பு பிடிப்பான் உதவியுடன் பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று மலைப்பாம்பை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Related Link கஞ்சா பேஸ்ட் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்