திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே அரசு பேருந்து மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த நிலையில், பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக கூறி, இறந்தவரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சென்ற அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.