சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஆலையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். மானாமதுரை தாலுகா வாடி கிராமத்தில் நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த கோழிப் பண்ணையில் அடையாளம் தெரியாத சிலர் பட்டாசு தயாரிப்பதாக வந்த தகவலை அடுத்து,சம்பவ இடத்தில் மானாமதுரை டிஎஸ்பி நரேஷ்,மற்றும் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார்ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல லட்சம் மதிப்புள்ள வெடி மருந்து பொருட்களை கைப்பற்றிய போலீசார். அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.