Also Watch
Read this
By: Admin News Tamil

வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

காலியாக உள்ள அனைத்து பணியிடங்களிலும் நிரப்ப வேண்டும், 7 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள் அனைவரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்திட வேண்டும், பணி மேற்பார்வையாளர் நிலையிலிருந்து உதவி பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்,வீடு கட்டும் திட்டத்திற்கான தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.