திருப்பத்தூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கடையின் மீது மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அந்த விபத்து தொடர்பான CCTV காட்சி வெளியாகியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த கௌதம் என்பவர் நண்பர்கள் 4 பேருடன், ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பியபோது, பொன்னேரி கூட்டு சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கடையின் மீது மோதினர்.