திருநெல்வேலி மாவட்டம் தருவை அருகே நான்குவழிச் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடைமிதிப்பான் குளம் பகுதியைச் சேர்ந்த ராஜ செல்வன் என்பவர், இருசக்கரவாகனத்தில் மூன்றடைப்பு நோக்கி சென்ற போது நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜசெல்வன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அவரது இருசக்கர வாகனமும் தீப்பிடித்து எரிய துவங்கியது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.