கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை கடித்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அஸாம் மாநிலத்தை சேர்ந்த அயூன் அன்சாரி குடும்பத்துடன் தங்கி PKT-க்கு சொந்தமான ஊசிமலை எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இவரது மகள் அப்சார் கத்தும் என்பவரை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு 14-ம் நம்பர் காட்டுக்குள் சென்றது. இதைக் கண்ட அவரது தாயார் நசீரான் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுத்தையை விரட்டி சென்றனர். ஆனால் சிறுமியின் சடலத்தை காட்டுக்குள் போட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது.