ராமநாதபுரத்தை இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இளைஞரை கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திரா நகரை சேர்ந்த சிறுமி 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.