சென்னையில், 17 வயது சிறுவனை கடத்தி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சந்திரசேகர் என்பவரது 17 வயது மகன், தனது இன்ஸ்டா நண்பர் அமீர், நேரில் சந்திக்க வற்புறுத்தியதால் முத்தையால் பேட்டை பகுதியில் உள்ள ஒரு டீ கடை அருகே காத்திருந்தார். அப்போது, அறிமுகம் இல்லாத ஒருவர் லிப்ஃட் கேட்டதை அடுத்து அவரை பைக்கில் ஏற்றிச் சென்ற சிறுவனை அந்நபருடன் சேர்ந்து 3 பேர் ஆட்டோவில் கடத்திச் சென்று கத்தியை காட்டி மிரட்டி அடித்து ஒரு வாரத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். இந்த சம்பவத்தில் மிரட்டல் விடுத்த விஜயக்குமார், ரஞ்சித் மற்றும் ஈசா ஆனந்த் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.