தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுள்ள சங்கரநாராயண சாமி கோவிலில் கோமதி அம்மன் சங்கரலிங்க சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு கைலாய காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெற்றது.