தேனி அருகே மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த மொக்கை பாண்டி என்பவருடைய 3 வயது மகன் இளமாறன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.