கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மூன்று காட்டு யானைகள் தனித்தனியே முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐப்பக்காணப்பள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியை தாக்கிக் கொன்ற காட்டு யானை சிங்கிரிப் பகுதியில் முகாமிட்டுள்ளது.மேலும் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவிற்கு விரட்டி அடிக்கப்பட்ட காட்டு யானை நேர்லகிரி வனப்பகுதியிலும், கடந்த மாதம் ஆந்திராவிற்கு விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானை சிகரமாகனப்பள்ளி வனப்பகுதியிலும் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 30 கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.