கோவை மதுக்கரை அருகே காரும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த இரண்டு மாத ஆண் குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜேக்கப் ஆபிரகாம், தனது காரில் மனைவி ஷீபா, மருமகள் அலினா தாமஸ் மற்றும் அவரது இரண்டு மாத பேரக்குழந்தையுடன் பெங்களூருவை நோக்கி சென்ற போது விபத்தில் சிக்கினர்.