நாமக்கல் அருகே தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் தொடர்பாக, தற்கொலைக்கு தூண்டியதாக மகனின் மனைவியை போலீஸார் கைது செய்தனர். எருமப்பட்டி அருகே அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் மற்றும் அவரது தந்தை செல்வராஜ், தாய் பூங்கொடி ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.