கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெங்களூருவில் இருந்து மூட்டை மூட்டையாக காரில் கடத்தி வரப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 250 கிலோ குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பண்ருட்டி காவல் நிலையத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்துக்கிடமாக வந்த 2 கார்களை சோதனை இட்டனர். அதில் கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அப்துல் ரஹீத் எனும் வியாபாரியிடம் விற்பனைக்கு கொடுப்பதற்காக, பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.