கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளை எட்டி வெள்ளி விழா நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் குறித்த பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடலில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளதால், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.