சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அறையில் இருந்த 25 சவரன் நகை மாயமானதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த நித்யா என்ற இளம் பெண் அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ]இந்தநிலையில், வீட்டில் பாலமுருகன் என்பவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பாலமுருகனை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.