திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்மநபர்கள் 14 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். நேதாஜி நகரை சேர்ந்த கண்ணன் தனது மனைவியுடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது மனைவியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.