கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனியாக வசித்து வரும் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சுமார் 13 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றார். தெய்வாணை என்பவரின் வீட்டிற்கு சென்ற இளைஞர், தாம் உறவுக்காரர் என கூறி மூதாட்டியின் கவனத்தை திசைத்திருப்பி கைவரிசை காட்டியுள்ளார்.