Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த 12 வகுப்பு மாணவி, தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாதரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 12 ம் வகுப்பு மாணவி விபத்தில் ஏற்பட்ட கால் முறிவுக்கு ஒசூரில் உள்ள விஜய் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிகிச்சை பெற்றார்.
எலும்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படும் நிலையில்,
சம்பவதன்று மாணவியின் முதுகு பகுதியில் ஊசி செலுத்தப்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.