காதல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் சுகுமாரன் தலைமறைவாகியுள்ளார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சுகுமாரன் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்தார். அதில் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.