வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீன பொருட்களுக்கு அமெரிக்காவும் மாறி மாறி அதிக வரி விதித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.