ரஷ்யாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் நடைபெற்ற முதல்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை, முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில், 2-ஆவது கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா பரிந்துரைத்துள்ளது.