நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பானின் தனியார் நிறுவனம் 2 ஆவது முறையாக அனுப்பிய விண்கலம், தரையிறக்கும் முயற்சியின் போது தொடர்பை இழந்ததால் திட்டம் தோல்வியடைந்தது. ஐஸ்பேஸ் நிறுவனம், நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்த நிலையில், மீண்டும் ஆளில்லா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சுற்றுப்பாதையில் இருந்து ரெஸிலியன்ஸ் விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் பணியை ஐஸ்பேஸ் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். ஆனால், தரையிறக்கும் பணியின் கடைசி கட்டத்தில் விண்கலம் தொடர்பை இழந்தது.