அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென ஹவுதி கிளர்ச்சியாளர்களை புகழ்ந்து தள்ளியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய அவர், ஹவுதிக்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும், அதனை தாக்குபிடிக்கும் அளவுக்கு அவர்கள் சிறந்த திறனை கொண்டிருந்ததாகவும் புகழாரம் சூட்டினார். மேலும் மிகப்பெரிய தண்டனையை அனுபவித்த போதும், ஹவுதிக்கள் துணிவை வெளிப்படுத்தியது வியப்பாக இருந்ததாகவும், அவர்களது வாக்குறுதிகளையும், அர்ப்பணிப்பையும் மதிப்பதாகவும் தெரிவித்தார். ஓமன் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று ஏமனில் ஹவுதிக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க அறிவித்த மறுநாள் ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.