பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்பின் நிர்வாகம் முழு ஆதரவு அளிப்பதாக, வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Tammy Bruce டிரம்ப் நிர்வாகம் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன்அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்திய துணைக்கண்டத்தில் நீண்டகால அமைதி நிலவும் வகையில் பிரச்சனைகளை பொறுப்பாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் கூறினார்.