இந்தியா உடனான ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவோ அல்லது வெளியீடோ இல்லை என்று அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களை இந்திய ஏவுகணைகள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு மத்தியில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள கிரானா மலைகளை இந்தியா தாக்கியதாக கூறப்படும் கருத்துக்களை விமானப்படை ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.