பொலிவியாவில் ஆட்சியை கைப்பற்ற போவதாக பரவிய தகவல்களை அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் கோபமடைந்த மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நிலையான எரிபொருள் விநியோகத்தை வலியுறுத்தி, லா பாஸில் பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் பேரணியாக சென்றனர்.