அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதால், 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலாவை சேர்ந்த 5 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் ஜோ பைடன் வழங்கிய சட்டப்பூர்வ அகதிகள் அந்தஸ்தை ட்ரம்ப் ரத்து செய்தார்.