ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள மெட்ரோ நிலையத்தில் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலினின் சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்ட சிலை, 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இது ஸ்டாலினுக்கு ஒரு வரலாற்று கௌரவம் என ஒரு தரப்பினரும், துன்பங்களுக்கு காரணமான ஒருவரை நினைவு கூறுவது தவறு என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.