பிரேசில் நாட்டின் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சர் கார்லோஸ் லூபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கார்லோஸ் லூபி, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூபாய் 9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவரது இல்லத்தில் இருந்து சொகுசு கார், நகை உட்பட ரூபாய் ஆயிரத்து 500 கோடி சொத்துகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கார்லோஸ் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.