குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெளியே புகைப்பிடிப்பதை பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. போதைப்பொருள் மற்றும் அடிமையாதல் போக்குகளுக்கான பிரான்ஸ் ஆய்வகம் ஆய்வை நடத்தி, 18 முதல் 75 வயதுடையவர்கள் தினமும் புகைப்பிடிப்பதாக அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் சுத்தமான காற்றை குழந்தைகள் சுவாசிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் இத்தடையை அமல்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.