ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை வாடிகனில் நடத்துவதற்கான தனது விருப்பத்தை, போப் 14ம் லியோ தன்னிடம் கூறியதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார். அமைதிக்கான இடைவிடாத உறுதிப்பாட்டிற்காக போப் லியோவுக்கு ஜியோர்ஜியா மெலோனி ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.