உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன. கருங்கடல் துறைமுகமான ஒடேசாவின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் வீடுகள் தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்ற நிலையில், இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.