உக்ரைன் மீது போரைத் தொடா்ந்து நடத்துவதற்காக, நேரம் கடத்தும் உத்தியை ரஷ்யா கடைப்பிடிப்பதாக உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடர்பாக அவர், நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை ரஷ்யா தொடா்ந்து விதிப்பது அமைதி முயற்சிக்கு எதிராக அமைந்து, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.